சென்னை: திமுகவை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட சிந்தனைகளின் வேராக விளங்கும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று திராவிட மாடல் அரசு, சமூகநீதி நாள் என பெயர்சூட்டி ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
 1.jpg)
அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாக இருப்பவைகளை அழித்திட வேண்டும் என்றார் தந்தை பெரியார்!
நமது திராவிட மாடல் அரசால், சமூகநீதி நாள் -எனக் கடைப்பிடிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாளில், இந்தியாவின் வளர்ச்சிக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் பெரும் தடையாக இருந்து வரும் சாதிய ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைவரையும் சமமாக நடத்தி, அனைத்துத் தரப்பினரும் சமவாய்ப்புகள் பெற்ற சமூகமாகத் திகழத் தமிழ்நாடெங்கும் உறுதிமொழி எடுக்கப்பட்டது!
என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்! என்றார் பேரறிஞர் அண்ணா!
புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க என்று வளர்ந்திருக்கிறோம்!
ஓரணியில் தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்! என்று தெரிவித்துள்ளார்.
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்
Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!
Tamil Poem: மாயவலை
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
{{comments.comment}}