சென்னை: ஒரு ஆணின் வெற்றிக்கு பின் பெண்கள் தான் உள்ளனர். எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 15 கோடிகளுக்கான திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் பேசுகையில், கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி வந்துவிடுகிறது. கொளத்தூர் என்று பெயர் சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள். கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் செய்து விட்டோம், மற்ற தொகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று நினைக்க வேண்டாம். எல்லா தொகுதியும் நம்முடைய தொகுதி தான்.
10 நாளைக்கு ஒருமுறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் தான் எனக்கு முழு திருப்தி ஏற்படுகிறது. முதலமைச்சராக இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மகிழ்ச்சியை காட்டிலும் கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகம்.

மேலும் ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பார்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் என் மனைவி துர்கா உள்ளார். என் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த பொழுது என் மனைவி என்னை விட்டுச் சென்று இருந்தால் என்னவாகி இருக்கும்? பல்வேறு இன்னல்களை சந்தித்தும் என்னை ஊக்கப்படுத்தி வருவதால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதனால் மனைவி சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
{{comments.comment}}