இது எங்கண்ணன் கொடுத்த சீர்.. பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பெண்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

Mar 11, 2024,06:13 PM IST

தருமபுரி:  பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம். மகளிருக்கு உரிமை தொகை வழங்குவோம் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். உரிமை தொகையைப் பெற்ற பெண்கள் இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் எனக் கூறுகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேசியுள்ளார்.


தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் தருமபரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 


இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:




தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான முத்தான விழா இது. தமிழ்நாட்டின் மகளிர் முன்னேற்றத்திற்கு தர்மபுரிக்கு முக்கியத்துவம் உண்டு. மகளிருக்கு உரிமை தொகை வழங்குவோம் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். உரிமை தொகையைப் பெற்ற பெண்கள் இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் எனக் கூறுகின்றனர். 


திராவிடம் மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட வேண்டும் என்றால் நாள் முழுவதும் பேச வேண்டும். மகளிர் சுய உதவி குழு என்று அமைப்பை தருமபுரியில் தான் கலைஞர் தொடங்கி வைத்தார். பெண் இனத்திற்கும் இளைஞர் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை தான் மகளிர்க்கு சொத்துரிமை. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர். பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம்.


மகளிர் உரிமை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் பயன் பெறுகின்றனர். திட்டத்தின் பயன்கள் முறையாக சென்று சேர்கிறதா என்பதை அறிய நீங்கள் நலமா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்து பார்த்து திட்டம் தீட்டி வருகிறோம். பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவால் இதுபோன்ற திட்டங்களை பட்டியலிட முடியுமா? 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர். 


மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெறுகின்றனர். இரண்டு ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியதே அதிமுக ஆட்சியின் சாதனை. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். 


தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரூ.10 கோடியில் எஃகு வேலி அமைக்கப்படும். சேலத்தில் 164 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். மத்திய அரசு 10 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை ரூ. 500 வரை உயர்த்தி விட்டு தற்போது ரூ. 100 மட்டும் ஒன்றிய அரசு குறைத்துள்ளது. மாநில அரசுகளுடன் பணம் வாங்கி திட்டங்களுக்கு தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறார் பிரதமர் மோடி. 


மத்திய அரசு சுற்றுப்பயணத்தை  வெற்று பயணமாக  தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். ரூ. 4 கோடியில் தர்மபுரி மாவட்டத்தில் 5 சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும். வெண்ணாம்பட்டி-தர்மபுரி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் பாரதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நடமாடும் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்