- மஞ்சுளா தேவி
டெல்லி: கொரோனா பரவலைப் போலவே தற்போது சீனாவில் நிமோனியா காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அது இந்தியாவுக்கும் பரவுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், எந்த சவாலையும் சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக சுகாதாரத்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாக உள்ளதாகவும், அதனால் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளது. மேலும் சீனாவில் பரவும் புதிய தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்தியா இப்போதே இதுதொடர்பாக அலர்ட் ஆக ஆரம்பித்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே இன்ஃப்ளுன்சா பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான தடுப்பு வழிமுறைகளையும் எப்படி செயல்படுத்துவது என்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய சுகாதார துறை நடத்தி வருகிறது.
வட சீனாவில் கடந்த ஒரு மாதமாக சுவாசக் கோளாறுகளால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். அதிக உடல் வெப்பம், சுவாச பிரச்சனை .. ஆனால் இருமல் இல்லை. இது என்ன வைரஸ் என கண்டறிந்த போது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நிமோனியா வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதிக்க கூடியதாக உள்ளது தெரிய வந்தது.
நிமோனியா வைரஸ் என்றால் என்ன
பூஞ்சை மற்றும் பாக்டீரியா வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சுவாச நோய். முதலில் இந்த நோய் நுரையீரல் செல்களில் அலர்ஜியை ஏற்படுத்தும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் நிமோனியாவால் பாதிக்கப்படுவர்.
அறிகுறிகள் என்ன?
1.சுவாசித்தலில் தடை .
2.சுவாசிப்பதில் சிரமம்
3.இதயத்துடிப்பு அதிகரித்தல்
4.காய்ச்சல்
5.குளிர்ச்சி மட்டும் அதிக வியர்வை
6.இருமல்
இந்த நிமோனியா வைரஸ் சீனாவில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனையில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் புதிய தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு சீன அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்கும். அதுபோலவே நிமோனியா வைரஸும் நுரையீரலை தாக்குகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக நிமோனியா வைரசாலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களே கவனமுடன் இருங்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் செல்லுங்கள்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}