- மஞ்சுளா தேவி
டெல்லி: கொரோனா பரவலைப் போலவே தற்போது சீனாவில் நிமோனியா காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அது இந்தியாவுக்கும் பரவுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், எந்த சவாலையும் சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக சுகாதாரத்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாக உள்ளதாகவும், அதனால் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளது. மேலும் சீனாவில் பரவும் புதிய தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்தியா இப்போதே இதுதொடர்பாக அலர்ட் ஆக ஆரம்பித்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே இன்ஃப்ளுன்சா பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான தடுப்பு வழிமுறைகளையும் எப்படி செயல்படுத்துவது என்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய சுகாதார துறை நடத்தி வருகிறது.
வட சீனாவில் கடந்த ஒரு மாதமாக சுவாசக் கோளாறுகளால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். அதிக உடல் வெப்பம், சுவாச பிரச்சனை .. ஆனால் இருமல் இல்லை. இது என்ன வைரஸ் என கண்டறிந்த போது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நிமோனியா வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதிக்க கூடியதாக உள்ளது தெரிய வந்தது.
நிமோனியா வைரஸ் என்றால் என்ன

பூஞ்சை மற்றும் பாக்டீரியா வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சுவாச நோய். முதலில் இந்த நோய் நுரையீரல் செல்களில் அலர்ஜியை ஏற்படுத்தும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் நிமோனியாவால் பாதிக்கப்படுவர்.
அறிகுறிகள் என்ன?
1.சுவாசித்தலில் தடை .
2.சுவாசிப்பதில் சிரமம்
3.இதயத்துடிப்பு அதிகரித்தல்
4.காய்ச்சல்
5.குளிர்ச்சி மட்டும் அதிக வியர்வை
6.இருமல்
இந்த நிமோனியா வைரஸ் சீனாவில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனையில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் புதிய தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு சீன அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்கும். அதுபோலவே நிமோனியா வைரஸும் நுரையீரலை தாக்குகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக நிமோனியா வைரசாலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களே கவனமுடன் இருங்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் செல்லுங்கள்.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}