டில்லி : இந்தியாவில் HMPV வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக HMPV வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசுடன் நிமோனியா, இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ்களும் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் பலரும் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இந்த வைரஸ் 2021ம் ஆண்டு முதலே இருந்து வருவதாகவும், இது ஒன்றும் புதியது கிடையாது என சொல்லப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் பரவி வந்த HMPV வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் நாடு முழுவதும் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மற்றொரு குழந்தைக்கும் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றிற்கும் HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் சோதனை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிடைக்கும் என்றும், அதே போல் குழந்தைகளுக்கான சிகிச்சை கிட்களும் விரைவில் அரசு சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து
நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!
வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?
Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!
Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!
{{comments.comment}}