டில்லி : இந்தியாவில் HMPV வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக HMPV வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசுடன் நிமோனியா, இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ்களும் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் பலரும் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இந்த வைரஸ் 2021ம் ஆண்டு முதலே இருந்து வருவதாகவும், இது ஒன்றும் புதியது கிடையாது என சொல்லப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் பரவி வந்த HMPV வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் நாடு முழுவதும் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மற்றொரு குழந்தைக்கும் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றிற்கும் HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் சோதனை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிடைக்கும் என்றும், அதே போல் குழந்தைகளுக்கான சிகிச்சை கிட்களும் விரைவில் அரசு சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}