பெங்களூரைத் தொடர்ந்து குஜராத்திலும் பரவிய HMPV வைரஸ்... ஒரே நாளில் 3 பேருக்கு பாதிப்பு

Jan 06, 2025,06:06 PM IST

டில்லி : இந்தியாவில்  HMPV வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3 பேருக்கு  HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சீனாவில் கடந்த சில வாரங்களாக  HMPV வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசுடன் நிமோனியா, இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ்களும் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் பலரும் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இந்த வைரஸ் 2021ம் ஆண்டு முதலே இருந்து வருவதாகவும், இது ஒன்றும் புதியது கிடையாது என சொல்லப்பட்டது.




இந்நிலையில் சீனாவில் பரவி வந்த  HMPV வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு  HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் நாடு முழுவதும் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மற்றொரு குழந்தைக்கும் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றிற்கும்  HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்து இந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் சோதனை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிடைக்கும் என்றும், அதே போல் குழந்தைகளுக்கான சிகிச்சை கிட்களும் விரைவில் அரசு சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்