பெங்களூரைத் தொடர்ந்து குஜராத்திலும் பரவிய HMPV வைரஸ்... ஒரே நாளில் 3 பேருக்கு பாதிப்பு

Jan 06, 2025,06:06 PM IST

டில்லி : இந்தியாவில்  HMPV வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3 பேருக்கு  HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சீனாவில் கடந்த சில வாரங்களாக  HMPV வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசுடன் நிமோனியா, இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ்களும் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் பலரும் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இந்த வைரஸ் 2021ம் ஆண்டு முதலே இருந்து வருவதாகவும், இது ஒன்றும் புதியது கிடையாது என சொல்லப்பட்டது.




இந்நிலையில் சீனாவில் பரவி வந்த  HMPV வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு  HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் நாடு முழுவதும் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மற்றொரு குழந்தைக்கும் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றிற்கும்  HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்து இந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் சோதனை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிடைக்கும் என்றும், அதே போல் குழந்தைகளுக்கான சிகிச்சை கிட்களும் விரைவில் அரசு சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்