கதையை விடுங்க.. ஓவியம் மாருதிதானே.. மறக்க முடியுமா?

Jul 28, 2023,03:19 PM IST
சென்னை: எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்கள் பலருக்கும் அந்தப் பெருமை கிடைக்க ஓவியர் மாருதிதான் முக்கியக் காரணமே.. அப்படிப்பட்ட வரைகலை மன்னரான மாருதி இயற்கை எய்தியுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் மக்களிடையே வாசிப்பு பழக்கம் வெகு அதிகமாக இருந்தது. குறிப்பாக வார இதழ்கள், மாத இதழ்கள், சிறுகதைகள், தொடர் கதைகளைப் படிக்க வெறியாக திரிவார்கள் அந்தக் காலத்து தமிழ் மக்கள். வாராவாரம் முக்கியப் பத்திரிகைகளில் வரும் தொடர் கதைகளுக்கு வெறித்தனமான ஃபேன்ஸ் இருந்த காலம் அது.



அத்தனை இதழ்களிலும் அப்போது கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஓவியர்களில் முக்கியமானவர் மாருதி எனப்படும் ரங்கநாதன். இவரது ஓவியம் இடம் பெறாத முக்கியப் பத்திரிகைகளே அப்போது கிடையாது. அவரது படங்கள் இடம் பெறாத கதைகளையும் அப்போது பார்க்க முடியாது. 

ஓவியர்களில் ஒரு சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் மாருதி. இவரது ஓவியங்களில் அந்த அளவுக்கு அழகும், இயல்பும் பிரமாதமாக இருக்கும். நேரிலேயே பார்ப்பது போல இருக்கும். குறிப்பாக இவரது பெண் படங்கள் அத்தனையுமே அத்தனை லட்சணமாக இருக்கும். அந்தக் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுப்பவை இவரது படங்கள்தான்.

கதை யார் என்பதை விடவும், ஓவியம் மாருதிதானே என்று பார்த்துப் பார்த்துப் படித்தவர்கள்தான் அப்போது அதிகம். கதாசிரியருக்குக் கிடைத்த அதே அளவிலான முக்கியத்துவமும், மரியாதையும், மாருதிக்கும் கிடைத்தது.
 


86 வயதான மாருதி சென்னையில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஓவியர் மாருதி.

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்