கதையை விடுங்க.. ஓவியம் மாருதிதானே.. மறக்க முடியுமா?

Jul 28, 2023,03:19 PM IST
சென்னை: எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்கள் பலருக்கும் அந்தப் பெருமை கிடைக்க ஓவியர் மாருதிதான் முக்கியக் காரணமே.. அப்படிப்பட்ட வரைகலை மன்னரான மாருதி இயற்கை எய்தியுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் மக்களிடையே வாசிப்பு பழக்கம் வெகு அதிகமாக இருந்தது. குறிப்பாக வார இதழ்கள், மாத இதழ்கள், சிறுகதைகள், தொடர் கதைகளைப் படிக்க வெறியாக திரிவார்கள் அந்தக் காலத்து தமிழ் மக்கள். வாராவாரம் முக்கியப் பத்திரிகைகளில் வரும் தொடர் கதைகளுக்கு வெறித்தனமான ஃபேன்ஸ் இருந்த காலம் அது.



அத்தனை இதழ்களிலும் அப்போது கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஓவியர்களில் முக்கியமானவர் மாருதி எனப்படும் ரங்கநாதன். இவரது ஓவியம் இடம் பெறாத முக்கியப் பத்திரிகைகளே அப்போது கிடையாது. அவரது படங்கள் இடம் பெறாத கதைகளையும் அப்போது பார்க்க முடியாது. 

ஓவியர்களில் ஒரு சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் மாருதி. இவரது ஓவியங்களில் அந்த அளவுக்கு அழகும், இயல்பும் பிரமாதமாக இருக்கும். நேரிலேயே பார்ப்பது போல இருக்கும். குறிப்பாக இவரது பெண் படங்கள் அத்தனையுமே அத்தனை லட்சணமாக இருக்கும். அந்தக் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுப்பவை இவரது படங்கள்தான்.

கதை யார் என்பதை விடவும், ஓவியம் மாருதிதானே என்று பார்த்துப் பார்த்துப் படித்தவர்கள்தான் அப்போது அதிகம். கதாசிரியருக்குக் கிடைத்த அதே அளவிலான முக்கியத்துவமும், மரியாதையும், மாருதிக்கும் கிடைத்தது.
 


86 வயதான மாருதி சென்னையில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஓவியர் மாருதி.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்