பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

Apr 26, 2025,10:48 AM IST

சேலம்: கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 27 வருடங்களுக்குப் பிறகு கொண்டாடும் திருவிழா என்பதால் சுத்துப்பட்டியில் உள்ள 18 கிராமங்கள் மக்களும் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


இந்த விழாவின் ஒரு பகுதியாக, நேற்று சாமி திருக்கல்யாண உற்சவத்திற்காக  சீர் வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் திருக்கல்யாணத்திற்காக சீர்வரிசையை சுமந்தபடி சென்றபோது பட்டாசு  வெடிக்கப்பட்டது. அப்போது, பைக்கில்  எடுத்துவரப்பட்ட 

பட்டாசுகளும் திடிரென வெடித்து சிதறின.  இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ்( 29), தமிழ்ச்செல்வன் ( 11), கார்த்தி (11), லோகேஷ் (20),  ஆகியோர்  உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 




இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் பைக்கில் வைத்து நாட்டு வெடியை கொண்டு சென்ற போது, சாலையில் வெடித்த பட்டாசுகளிலிருந்து தீப்பொறி பட்டதில் நாட்டு வெடி சிதறியதாக தெரியவந்துள்ளது. சேலத்தில் கோவில்  திருவிழாவிற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. 


இந்த நிலையில் கோயில் திருவிழாவின்போது பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பட்டாசு வெடித்து  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் நிதி வழங்கப்படும் எனவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதல் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்