சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களையும் சிறப்பு அதிகாரம் மூலம், ஆளுநரின் கையெழுத்து இல்லாமலேயே உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய இந்தத் தீர்ப்பு நாடு தழுவிய அளவில் ஆளுநர் -மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வரும் மிகப் பெரிய பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது. இதுதொடர்பான அரசு கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது. இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுக்களை முதல்வரே நியமிக்க முடியும். யுஜிசி பிரதிநிதியை இதில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக வருகிற 16ம் தேதி துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது உயர் கல்வி மேம்பாடு தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களின் மேம்பாடு குறித்தும் முக்கிய ஆலோசனைகளை முதல்வர் மேற்கொள்ளவுள்ளார்.
இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. இன்று வீடு திரும்புவதாக தகவல்..!
தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில்.. டமால் டுமீலுடன் மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
சுற்றித் திரியும் ஒற்றை யானை.. காட்டுக்குள் அனுப்ப வனத்துறை தீவிரம்.. தொட்டபெட்டா செல்ல இன்று தடை!
பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!
சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!
செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா
Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!
குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்