ஏப்ரல் 16ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Apr 13, 2025,09:14 PM IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.


தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களையும் சிறப்பு அதிகாரம் மூலம், ஆளுநரின் கையெழுத்து இல்லாமலேயே உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய இந்தத் தீர்ப்பு நாடு தழுவிய அளவில் ஆளுநர் -மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வரும் மிகப் பெரிய பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதப்படுகிறது.




இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது. இதுதொடர்பான அரசு கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது. இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுக்களை முதல்வரே நியமிக்க முடியும். யுஜிசி பிரதிநிதியை  இதில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.


இந்த நிலையில் அடுத்த அதிரடியாக வருகிற 16ம் தேதி துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது உயர் கல்வி மேம்பாடு தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களின் மேம்பாடு குறித்தும் முக்கிய ஆலோசனைகளை முதல்வர் மேற்கொள்ளவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்