சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களையும் சிறப்பு அதிகாரம் மூலம், ஆளுநரின் கையெழுத்து இல்லாமலேயே உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய இந்தத் தீர்ப்பு நாடு தழுவிய அளவில் ஆளுநர் -மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வரும் மிகப் பெரிய பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது. இதுதொடர்பான அரசு கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது. இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுக்களை முதல்வரே நியமிக்க முடியும். யுஜிசி பிரதிநிதியை இதில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக வருகிற 16ம் தேதி துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது உயர் கல்வி மேம்பாடு தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களின் மேம்பாடு குறித்தும் முக்கிய ஆலோசனைகளை முதல்வர் மேற்கொள்ளவுள்ளார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}