- சுமதி சிவக்குமார்
சென்னை: தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.ஆர்.சுகுமார், கலைஞர் எழுதுகோல் விருதினைப் பெற்றுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கிக் கெளரவித்தார்.
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. முதல் விருதை மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் பெற்றார். 2022ல் வி.என்.சாமி, 2023ல் நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
2024ம் ஆண்டுக்கான விருது தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்.சுகுமார் பெற்றார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை டி.வி.ஆர் சுகுமாருக்கு வழங்கிக் கெளரவித்தார். இதழியல் துறையில் 50 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சுகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்., தமிழ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Let us celebrate Erode day
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}