பெண்களை மதித்த.. போற்றிய.. கொண்டாடிய.. முண்டாசுக் கவிஞனுக்கு நன்றி சொல்வோம்!

Mar 08, 2026,10:18 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


மார்ச் 8‌ மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்நன்னாளில்  பெண்களைப் போற்றிய; பெண்களை மதித்த; பெண்களை சமமாக பாவித்த;பெண்களின் கனவுகளுக்கு கை கொடுத்த 


ஒரே ஆண்மகன் 

முண்டாசுக் கவி 

மகாகவி பாரதிக்கு

நன்றி சொல்ல  கடமைப்பட்டிருக்கிறேன்.


பாரதியின் பாட்டாலே புதுமைப்பெண் என்ற புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நேர்கொண்டு பார்த்தவள் பெண்.


பெண்களைக் கல்வியறிவு பெறவிடாத‌ மூடர்களைச் சாடியவன்




பெண்ணுக்கு ஞானம் ஈசன் அருளியது .... அதைத் தடுக்கும் அறிவிலிகளையும் அவர்தம் மடமைகளையும்...

தன் எழுத்தாலே சுட்டெரித்தவன்.


ஆணும்‌ பெண்ணும் சமம் என்றால் தான் இந்த உலகம் சிறக்கும் என்ற பாரதி தான்‌ பெண்களின் நம்பிக்கை நாயகன்...


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.... என்று பெண்ணுக்குக் குரல் கொடுத்த குல தெய்வம்....


பெண்மை வாழ்க! பெண்மை வெல்க!என்றுரைத்த புரட்சிக்கவி பாரதி போல் இனி யாரும் எங்கும் காண்பதரிது!!


பாட்டுடைத்தலைவன்‌ பாரதியின் பொற்பாதம் வணங்கி இந்நன்னாளில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்....


மங்கையர் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!!


வென்று காட்டலாம் பாரதி கண்ட புரட்சிப்‌ பெண்களே!!!


பாரதியின் எழுத்துக்கு உயிர் கொடுப்போம் பெண் சக்திகளே!


வாழ்க பெண்மை!வெல்க  பெண்மை!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!

news

யாசகத்தோழி!

news

வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!

news

பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!

news

சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!

news

Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!

news

Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!

news

Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!

news

World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்