சென்னை: பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.,ஸ்டாலின் பிளஸ்டூவில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய 7.72 லட்சம் பேரில் 7,19,196 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 92.37 சதவீத மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் அடக்கம். வழக்கம் போல் இந்த தேர்விலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 2,478 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் 91.02 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 96.07 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி அவரவர் பள்ளிகளில் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}