சென்னை: பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.,ஸ்டாலின் பிளஸ்டூவில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய 7.72 லட்சம் பேரில் 7,19,196 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 92.37 சதவீத மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் அடக்கம். வழக்கம் போல் இந்த தேர்விலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 2,478 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் 91.02 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 96.07 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி அவரவர் பள்ளிகளில் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}