"பெண் சூரியன்" நிகர்ஷாஜி.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து.. பெருமிதம்!

Sep 04, 2023,10:20 AM IST
சென்னை:  ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர்ஷாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தும், பெருமிதமும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த நிகர்ஷாஜி ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக செயல்பட்டுள்ளார். ஆதித்யா எல் 1 விண்கலம் சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்நிகர்ஷாஜிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நிகர்ஷாஜி தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, முதல்வர் மு .க ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.



தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான #AdityaL1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி #NigarShaji அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து #Chandrayaan முதல் #Aditya வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். 

இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து தான் ஆய்வு செய்யவுள்ள லாக்ரேஞ்ச் 1 பகுதியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. ஐந்து வருடம் தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளவுள்ளது ஆதித்யா எல் 1 விண்கலம். 

இதன் திட்ட இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் செங்கோட்டையில் பிறந்தவரான நிகர் ஷாஜி. செங்கோட்டை அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர் இவர்.  இஸ்ரோவின் முக்கியத் திட்டங்களான சந்திராயன் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளே திட்ட இயக்குநர்களாக இருந்தனர். அதேபோல  ஆதித்யா எல் 1 திட்டத்துக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே திட்ட இயக்குநராக இருந்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்