"பெண் சூரியன்" நிகர்ஷாஜி.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து.. பெருமிதம்!

Sep 04, 2023,10:20 AM IST
சென்னை:  ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர்ஷாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தும், பெருமிதமும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த நிகர்ஷாஜி ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக செயல்பட்டுள்ளார். ஆதித்யா எல் 1 விண்கலம் சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்நிகர்ஷாஜிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நிகர்ஷாஜி தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, முதல்வர் மு .க ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.



தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான #AdityaL1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி #NigarShaji அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து #Chandrayaan முதல் #Aditya வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். 

இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து தான் ஆய்வு செய்யவுள்ள லாக்ரேஞ்ச் 1 பகுதியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. ஐந்து வருடம் தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளவுள்ளது ஆதித்யா எல் 1 விண்கலம். 

இதன் திட்ட இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் செங்கோட்டையில் பிறந்தவரான நிகர் ஷாஜி. செங்கோட்டை அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர் இவர்.  இஸ்ரோவின் முக்கியத் திட்டங்களான சந்திராயன் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளே திட்ட இயக்குநர்களாக இருந்தனர். அதேபோல  ஆதித்யா எல் 1 திட்டத்துக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே திட்ட இயக்குநராக இருந்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்