சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என நம்ப வைத்து மு.க.ஸ்டாலின் கழுத்து அறுத்துவிட்டார் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் என்ற அடிப்படையில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது தவறு. 7 சதவீத மக்கள் தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5 சதவீத பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் அது ரத்து செய்யப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தருவோம் என நம்ப வைத்து முதலமைச்சர் கழுத்தறுத்து விட்டார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக திரும்பத் திரும்ப வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் கூறினார். பின் தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள். பின் தங்கிய சமூக இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கு முறையாக கணக்கெடுப்பு வேண்டும்.

என்னுடைய மனதில் சமூக நீதி வெறி உள்ளது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ். அவரைப் பார்த்து பார்த்து தான் நான் வளர்ந்தேன். சமூக நீதியை டாக்டர் ராமதாஸ் இடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும். ஒரு மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம். கர்நாடகா, பீகார்,ஒடிசா போன்ற மாநிலங்கள் அவ்வாறு கணக்கெடுப்பை எடுத்துள்ளன.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு தான் உள்ளது என முதலமைச்சர் பேசுவது பொய். மாநில உரிமை என பேசும் முதலமைச்சர் மற்ற விஷயங்களுக்கு எல்லாம் மத்திய அரசை எதிர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு மட்டும் தயங்குவது ஏன் இது வன்னியர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. சமூக நீதி பிரச்சனை என்று தெரிவித்துள்ளார்.
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}