முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Jun 21, 2025,04:45 PM IST

சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என நம்ப வைத்து மு.க.ஸ்டாலின் கழுத்து அறுத்துவிட்டார் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் என்ற அடிப்படையில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது தவறு.  7 சதவீத மக்கள் தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5 சதவீத பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் அது ரத்து செய்யப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தருவோம் என நம்ப வைத்து முதலமைச்சர் கழுத்தறுத்து விட்டார்.


இட ஒதுக்கீடு தொடர்பாக திரும்பத் திரும்ப வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் கூறினார். பின் தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள். பின் தங்கிய சமூக இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கு முறையாக கணக்கெடுப்பு வேண்டும்.




என்னுடைய மனதில் சமூக நீதி வெறி உள்ளது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ். அவரைப் பார்த்து பார்த்து தான் நான் வளர்ந்தேன். சமூக நீதியை டாக்டர் ராமதாஸ் இடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும். ஒரு மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம். கர்நாடகா, பீகார்,ஒடிசா போன்ற மாநிலங்கள் அவ்வாறு கணக்கெடுப்பை எடுத்துள்ளன.


சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு தான் உள்ளது என முதலமைச்சர் பேசுவது பொய். மாநில உரிமை என பேசும் முதலமைச்சர் மற்ற விஷயங்களுக்கு எல்லாம் மத்திய அரசை எதிர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு மட்டும் தயங்குவது ஏன் இது வன்னியர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. சமூக நீதி பிரச்சனை என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்