தொடரும் தென் மேற்குப் பருவ மழை.. மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Jul 20, 2024,07:21 PM IST

சென்னை:  தென் மேற்குப் பருவ மழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நீலகிரி, கோயம்பத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூர், ஆகிய நான்கு தாலுகாவுக்கு  இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 




அதேபோல் முதுமலையிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால்  சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வந்த வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரவேண்டாம் என  நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் விட்டுவிட்டு பெய்யும்  தொடர் கனமழை எதிரொலியாக முதுமலை புலிகள் காப்பகம் மூன்று நாட்கள் மூடப்படுவ தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான கன மழை பெய்ய கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு இன்று எல்லோ அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கனமழை காலங்களில் மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசணை மேற்கொண்டு வருகிறார். நிவராணப் பணிகளை முடுக்கி விடுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்