- சிவ ஆ மலர்விழி ராஜா
பெண்ணாய் பிறந்திடவே
பெருந்தவம் செய்தவளே.... !
மண்ணில்
பிறந்துதித்த
மாந்தர் குல
மணி விளக்கே.....!
பேதை பெதும்பை
மங்கை மடந்தை என்றும் .....!
அரிவை
தெரிவை பேரிளமென
பெண்ணினம் வளர்ந்து
போற்றிடவே..... !

நானிலம் போற்றும்
மங்கையென....
விண்ணிற்கும்
மண்ணிற்கும்
பெருமை தந்தவளே.... !
கண்ணின் மணியாக
கடமை கண்ணியம்
காத்திடவே.....!
கட்டுப்பாடு என்ற உணர்வுடன்
வாழ்ந்திடவே..... !
கழநியில் பயிர்
செய்து கதிரினை
சுமப்பவளே...... !
சுமைகள் பல ஏற்று
சுகத்தினை தருபவளே..... !
வையத்தை
காத்திடவே
வீரத் திருமகவை
தீரமுடன்
பெற்றவளே......!
மாதராய்
பிறந்திடவே
மா தவம் செய்தவளே......!
வலிகள் பல
தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... !
சோதனைகள் பல வென்று சாதனை
படைப்பவளே....... !
பெண்ணினமென்ற
ஏளனபார்வை
வென்று.....!
எதிலும் பெண் என்று
ஏகமும் நீயானாய்..... !
பெண்ணே நீ வாழ்க
பெண்ணினம் சுமை என்ற பேதமை மாறிடவே..... !
பெண்ணே நாட்டின்
கண்கள்...... !
வாழ்க பெண்ணினம்
அன்பு சகோதரிகளுக்கு
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}