- சிவ ஆ மலர்விழி ராஜா
பெண்ணாய் பிறந்திடவே
பெருந்தவம் செய்தவளே.... !
மண்ணில்
பிறந்துதித்த
மாந்தர் குல
மணி விளக்கே.....!
பேதை பெதும்பை
மங்கை மடந்தை என்றும் .....!
அரிவை
தெரிவை பேரிளமென
பெண்ணினம் வளர்ந்து
போற்றிடவே..... !

நானிலம் போற்றும்
மங்கையென....
விண்ணிற்கும்
மண்ணிற்கும்
பெருமை தந்தவளே.... !
கண்ணின் மணியாக
கடமை கண்ணியம்
காத்திடவே.....!
கட்டுப்பாடு என்ற உணர்வுடன்
வாழ்ந்திடவே..... !
கழநியில் பயிர்
செய்து கதிரினை
சுமப்பவளே...... !
சுமைகள் பல ஏற்று
சுகத்தினை தருபவளே..... !
வையத்தை
காத்திடவே
வீரத் திருமகவை
தீரமுடன்
பெற்றவளே......!
மாதராய்
பிறந்திடவே
மா தவம் செய்தவளே......!
வலிகள் பல
தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... !
சோதனைகள் பல வென்று சாதனை
படைப்பவளே....... !
பெண்ணினமென்ற
ஏளனபார்வை
வென்று.....!
எதிலும் பெண் என்று
ஏகமும் நீயானாய்..... !
பெண்ணே நீ வாழ்க
பெண்ணினம் சுமை என்ற பேதமை மாறிடவே..... !
பெண்ணே நாட்டின்
கண்கள்...... !
வாழ்க பெண்ணினம்
அன்பு சகோதரிகளுக்கு
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
{{comments.comment}}