கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!

Sep 07, 2026,12:08 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


கண்ணுல  

வச்சுத்தான்  

காப்பேனு 

கருத்தாதேன் 

சொன்னீக!


தூசிகூடப்

பட்டுக்

கலங்கிடாம 

கரசேக்க

வந்தீக!


காத்துக்

கருப்பு 

அண்டிடாம  

கனவுலயும்  

மெதந்தீக!




அம்புட்டு

ஆசயும் 

சொல்லிப்புட்டேன் 

ஒம்மனச

அள்ளிப்புட்டேன்!


தைமாசம்  

பொறக்கட்டும்  

தங்கத்துல

தாலியத்தான்

செஞ்சுடையா!


ஊரெல்லாம் 

சுத்தித்தான் 

வருவோமா!

ஒலகமே  

நீதானையா!


உள்ளத்துல 

ஓமொகத்த

ஒட்டவச்சுப்

பாக்குதே

பாவிமனம்! 


ஒன்னுசேரும் 

நேரம் 

வரவே  

கும்புடுறேன்

கடவுளையே!


மால 

மாத்தித்  

தோளுலதான் 

சாஞ்சு

கொள்ளலாமா!


நல்லசேதி  

கேட்டிடத்தான்

நாந்துடிக்க 

நாளுகடத்த  

வேணாமையா! 


(ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்திய தன்னம்பிக்கைக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்