சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடலூரில் இன்றும் நாளையும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் தோறும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை கோவை, விருதுநகர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக திமுக சார்பில் திட்டமிட்டுப்பட்டுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே விழுப்புரத்தில் நடைமுறைப்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 4,50,134 பேரும், விடியல் திட்டத்தில் 18 கோடியே 60 லட்சத்து 63ஆயிரத்து,302 பேரும், புதுமைப்பெண் திட்டத்தில் 13 ஆயிரத்து 18 பேரும், தமிழ் புதல்வன் திட்டத்தில் 13,514 பேரும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 63,662 தொடக்கப்பள்ளி மாணவர்களும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 1500 குடும்பங்களும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 20 லட்சத்து 86 ஆயிரத்து 173 பேரும் பயனடைந்து உள்ளனர். மேலும், இத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேருகிறதா என்பது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள இன்றும் நாளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார்.
இதற்காக, சென்னையில் இருந்து இன்று காலை சாலை மார்க்கமாக கடலூர் மஞ்சக்குப்பம் செல்லும் அவர், அரசு சார்பில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 30,000 க்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் நெய்வேலியில் ரோடு ஷோவை முடித்துக் கொண்டு மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்கிறார். இதில் மாற்று கட்சியினர் 5000 பேர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
பின்னர் இரவு அரசினர் மாளிகையில் தங்கிவிட்டு மீண்டும் நாளை வேட்பூரில் நடைபெறும் பெற்றோரை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அப்போது முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இருக்கிறார்.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}