காலை உணவுத் திட்டம்.. கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Aug 25, 2023,09:42 AM IST
நாகப்பட்டனம்: விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை நாகப்பட்டனம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருக்குவளை அரசு நடுநிலைப் பள்ளியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து அவரும் சாப்பிட்டார். இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ்நாடு அரசு சார்பில் நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும இருந்து வந்த இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு முழுவதுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைத்தரா். 4 நாட்கள் சுற்றுப்பயணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் முதல்வர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருக்குவளை அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.



முதலில் மாணவர்கள் சிலருக்கு அவரே உணவு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். தனக்கு அருகே இருந்த சிறுமியிடம் உன் பெயர் என்ன, நான் யார்னு தெரியுமா.. சாப்பாடு நல்லாருக்கா.. என்ன படிக்கிறே என்று கேட்க அந்த சிறுமியும் ஆவலுடன் பதிலளித்தார்.

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலமாக 17 லட்சம் மாணவ, மாணவியர் பலனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்