சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு, நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மு. க ஸ்டாலின் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை துவங்கி வைக்கிறார்.
அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கும் பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும், பெண்களைப் போற்றும் வகையிலும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் கையில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நேற்று காவல் உதவி qr கோடு திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில், கடந்த சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பாக மகளிர் பிங்க் ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பிங்க் ஆட்டோ திட்டத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த திட்டத்தின் மூலமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
அதே சமயத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களின் மூலம் பயன்பெறும் மகளிர்களுக்கு 3000 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கிய சிறப்பிக்க இருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
{{comments.comment}}