சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு, நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மு. க ஸ்டாலின் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை துவங்கி வைக்கிறார்.
அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கும் பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும், பெண்களைப் போற்றும் வகையிலும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் கையில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நேற்று காவல் உதவி qr கோடு திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில், கடந்த சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பாக மகளிர் பிங்க் ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பிங்க் ஆட்டோ திட்டத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த திட்டத்தின் மூலமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
அதே சமயத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களின் மூலம் பயன்பெறும் மகளிர்களுக்கு 3000 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கிய சிறப்பிக்க இருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}