சென்னை : தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து தனக்கே தகவல் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார். பல நாட்கள் அங்கு தங்கவுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான சந்திப்புகளில் அவர் பங்கேற்கிறார். நீண்ட நாட்கள் அவர் அமெரிக்காவில் தங்கவுள்ளதால் அவர் வரும் வரை அவரது முதல்வர் பொறுப்பை யாரிடமாவது கொடுக்க வேண்டும். இதையும் மனதில் வைத்து மேலும் சில அமைச்சர்களை மாற்றும் வகையில் அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று வெளியான தகவலின் படி, ஒரு மூத்த அமைச்சர் மற்றும் 2 அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக மூன்று புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகவும் தகவல் கூறுகின்றன. சிலரது இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று முதல்வரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்கு முதல்வர் சிரித்துக் கொண்டே, எனக்கு தகவல் வரலை என்று அதிரடியாக கூறினார்.
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை மாநில அரசுதான் நடத்தியதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியது குறித்த கேள்விக்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நிகழ்வை மாநில அரசு நடத்தியதாக விளக்கம் அளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}