சென்னை: ஆளுநர் அனைத்து விவகாரங்களிலுமே அரசுக்குப் பிரச்சினை செய்து கொண்டுதான் உள்ளார். ஆனால் அவர் இப்படியே செய்யட்டும். அவரது செயல்பாடுகள் திமுக அரசுக்குத்தான் சிறப்பு சேர்க்கின்றன. எனவே அவர் இப்படியே செய்து கொண்டிருக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது:
ஒன்று இரண்டில்லை.. அனைத்து பிரச்சினையிலுமே ஆளுநர் பிரச்சனை செய்து கொண்டுதான் வருகிறார். அரசுக்கு எதிராகத்தான் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டரீதியாக என்ன நடவடிக்கை வேண்டுமோ. அதை எடுத்து வருகிறோம். உச்சநீதிமன்றத்திலும் நாம் தொடர்ந்த வழக்கில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு தான் சேர்கிறது. எனவே ஆளுநர் தொடர்ந்து அப்படியே செயல்பட்டு வரட்டும்.
பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை அளிக்க நாங்கள் தயாராக இல்லை. காரணம் பெரியார் எங்கள் தலைவர். எங்கள் தலைவருக்கெல்லாம் தலைவர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து மொத்தமாக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய வருகின்றன.
வடசென்னை வளர்ச்சிக்காக ரூபாய் 1000 கோடியில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அடிக்கல் நாட்டு விழாவின்போது நான் வந்தேன். இப்பொழுது மீண்டும் வந்து ஆய்வு செய்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். நான் மேயராக இருந்த போதும் பின்னர் துணை முதல்வராக இருந்த போதும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளேன். ஓராண்டு காலத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!
கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!
Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?
Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!
தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 24, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
பிபியை எகிற வைத்து.. சேப்பாக்கத்தில்.. பிரில்லியன்ட்டான முதல் வெற்றியை சுவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
{{comments.comment}}