சட்டம்ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. அதனால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் வருகின்றன.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jan 31, 2025,06:53 PM IST

சென்னை: ஆளுநர் அனைத்து விவகாரங்களிலுமே அரசுக்குப் பிரச்சினை செய்து கொண்டுதான் உள்ளார். ஆனால் அவர் இப்படியே செய்யட்டும். அவரது செயல்பாடுகள் திமுக அரசுக்குத்தான் சிறப்பு சேர்க்கின்றன. எனவே அவர் இப்படியே செய்து கொண்டிருக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது:




ஒன்று இரண்டில்லை.. அனைத்து பிரச்சினையிலுமே ஆளுநர் பிரச்சனை செய்து கொண்டுதான் வருகிறார். அரசுக்கு எதிராகத்தான் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டரீதியாக என்ன நடவடிக்கை வேண்டுமோ. அதை எடுத்து வருகிறோம். உச்சநீதிமன்றத்திலும் நாம் தொடர்ந்த வழக்கில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு தான் சேர்கிறது. எனவே ஆளுநர் தொடர்ந்து அப்படியே செயல்பட்டு வரட்டும்.


பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை அளிக்க நாங்கள் தயாராக இல்லை. காரணம் பெரியார் எங்கள் தலைவர். எங்கள் தலைவருக்கெல்லாம் தலைவர்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து மொத்தமாக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய வருகின்றன.


வடசென்னை வளர்ச்சிக்காக ரூபாய் 1000 கோடியில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அடிக்கல் நாட்டு விழாவின்போது நான் வந்தேன். இப்பொழுது மீண்டும் வந்து ஆய்வு செய்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். நான் மேயராக இருந்த போதும் பின்னர் துணை முதல்வராக இருந்த போதும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளேன். ஓராண்டு காலத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்