சென்னை: தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிவிட்டு பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசிய போது தமிழர்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது என முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களவை கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என பேசியது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. இதனால் இவரின் பேச்சை கண்டித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் போர்க்கொடி ஏந்தி வருகின்றனர். அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தி திணிப்பு மற்றும் கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து நேற்றும் இன்றும் திமுக எம்பிக்கள் தொடர்ந்து கண்டனம் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்தியை ஏற்க மாட்டோம்.. மும்மொழிக் கொள்கை ஏற்கமாட்டோம்..மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தருவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமிராக பேசுகிறார். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக அளித்து முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!"
2025-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!"
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
"இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்" எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}