சென்னை: மத்திய அரசுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.. தமிழ்நாடு பணியாது.. நாங்கள் ஒன்றாக எழுவோம்.. இது டெல்லி அணிக்கு எதிரான ஓரணி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
உலக மக்கள் தொகை தினத்தன்று, மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்:

மக்கள் தொகை கட்டுக்குள் வைத்திருப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரமளிக்கிறது.
அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குகிறது. நிலையான வளர்ச்சியை ஆதரிக்கிறது.
ஆனால், இதற்குப் பதிலாக நமக்கு என்ன கிடைக்கிறது?
குறைவான நாடாளுமன்ற இடங்கள். குறைந்த நிதி ஒதுக்கீடு. நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் குரல். ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அது டெல்லிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
இதில் மோசமானது என்னவென்றால் - திரு. பழனிசாமி மற்றும் அவரது கட்சி தமிழ்நாட்டுடன் நிற்காமல், டெல்லியுடன் நிற்கிறார்கள். நமது முன்னேற்றத்திற்காக நம்மை தண்டிக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு அவர்கள் துணை போகிறார்கள்.
ஆனால் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: தமிழ்நாடு பணியாது. நாம் ஒன்றாக எழுவோம் - இது ஓரணி vs டெல்லி அணி என்று முதல்வர் கூறியுள்ளார்.https://www.thentamil.com/topic/world-popoulation-day
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}