சென்னை: சென்னையில் கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை முக்கிய கடமையாக கருதி வருகின்றனர். இவ்வாறாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் ஒரு நாள் முன்னர் வந்து தங்குவார்கள். அதன்பின்னர் விமான நிலையம் சென்று ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
இவர்களுக்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் சுமார் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.39.20 கோடியில் 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்காக கட்டப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று அடிக்கல் நாட்டி கட்டடப்பணியினை துங்கி வைத்தார். சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் ஹஜ் இல்லம் கட்டிட பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள். இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
{{comments.comment}}