சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் அம்மா உணவகம் செயல்பாடுகள் குறித்தும், அங்கு உணவருந்தவர்களிடம் உணவுகளின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். இதன் பின் முதல்வர் தானே களத்தில் இறங்கி அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு அதன் தரத்தையும் உறுதி செய்தார்.
இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதாவது,

அம்மா உணவகங்களில் பழுதடைந்த பாத்திரங்கள் பழைய சமையல் உபகரணங்களை மாற்ற வேண்டும். இந்த பழைய பாத்திரங்களை மாற்றி புதிய சமையல் உபகரணங்கள் வழங்க வேண்டும். சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புரனமைக்க 14 கோடி, மற்றும் பழைய சமையல் உபகரணங்களை மாற்றி புதிய உபகரணங்கள் வழங்க ஏழு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டும் என உத்தரவிட்டார்.
ஏழை எளியோர்கள் பயனடையும் வகையில் அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்த வேண்டும். சமையல் கூடம், உணவு பரிமாறும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்தந்த மண்டலத்தில் உள்ள அம்மா உணவகங்களை
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

இது தவிர உணவின் தரம் ஒருபோதும் குறையாமல், தரம் சுவையுடன் உணவுகளை தயாரிக்க அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.
மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதிமுக ஆட்சியின் கொண்டு வரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். ஏழை எளியோர் குறிப்பாக தினக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா சமயத்திலும் பலருக்கு இது உதவியது. மக்கள் வரவேற்பைப் பெற்ற அம்மா உணவகங்களை திமுக அரசு மேலும் சிறப்பாக நடத்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
Bangladesh in Tears: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா காலமானார்
vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
{{comments.comment}}