- மஞ்சுளா தேவி
தூத்துக்குடி: அதீத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். நெல்லைக்கும் அவர் செல்கிறார்.
முதற்கட்டமாக தூத்துக்குடியில் உள்ள மில்லர்புரத்தில் இருந்து பாதுகாப்பு முகாமிற்கு சென்று அங்கு மக்களைச் சந்தித்தார். முகாமில் உள்ள 600 பேருக்கு நிவாரண பொருட்களான அரிசி, வேட்டி ,சேலை, போர்வை, பாய் பவுடர், ரொட்டி உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்குகிறார். இதனை தொடர்ந்து அதிக பாதிப்பை சந்தித்த பகுதிகளான முத்தமாள் காலனி ,குறிஞ்சி நகர், ரஹ்மத் காலனி ஆகிய பகுதிகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
இதனை முடித்துவிட்டு திருநெல்வேலிக்கு கார் மூலமாக செல்ல இருக்கிறார். அங்கு உள்ள நெல்லை சந்திப்பு உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார். பிறகு அங்கு உள்ள காவல் கட்டுப்பாடு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையை முடித்துவிட்டு செய்தியாளர்களை முதல்வர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு மதுரை திரும்பும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் செல்வார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}