- மஞ்சுளா தேவி
தூத்துக்குடி: அதீத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். நெல்லைக்கும் அவர் செல்கிறார்.
முதற்கட்டமாக தூத்துக்குடியில் உள்ள மில்லர்புரத்தில் இருந்து பாதுகாப்பு முகாமிற்கு சென்று அங்கு மக்களைச் சந்தித்தார். முகாமில் உள்ள 600 பேருக்கு நிவாரண பொருட்களான அரிசி, வேட்டி ,சேலை, போர்வை, பாய் பவுடர், ரொட்டி உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்குகிறார். இதனை தொடர்ந்து அதிக பாதிப்பை சந்தித்த பகுதிகளான முத்தமாள் காலனி ,குறிஞ்சி நகர், ரஹ்மத் காலனி ஆகிய பகுதிகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
இதனை முடித்துவிட்டு திருநெல்வேலிக்கு கார் மூலமாக செல்ல இருக்கிறார். அங்கு உள்ள நெல்லை சந்திப்பு உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார். பிறகு அங்கு உள்ள காவல் கட்டுப்பாடு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையை முடித்துவிட்டு செய்தியாளர்களை முதல்வர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு மதுரை திரும்பும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் செல்வார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}