மீண்டும் அமைச்சராகும் பொன்முடி.. பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Mar 13, 2024,07:00 PM IST

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு  தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. அவர் உறுப்பினராக இருந்து வந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தகவல் தெரிவித்தது.




இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. அதாவது தீர்ப்பை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைத்துள்ளது. மேலும் திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிவிக்கையையும் சட்டசபை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது.


இதைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ஆர். என். ரவிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இன்று அல்லது நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்