பாட்னா: பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவாக 125 பேரின் ஆதரவு கிடைத்தது. எதிர்த்து 112 வாக்குகள் பதிவாகின. முன்னதாக ராஷ்டிரிய ஜனதாதளம், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்புச் செய்தனர்.
பீகாரில் ஆர்ஜேடி கூட்டணியை உதறி விட்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார் நிதீஷ் குமார். இந்த நிலையில் பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் நிதீஷ் குமார். இதையடுத்து சூடான விவாதம் நடந்தது.

அதில் கலந்து கொண்டு பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உணர்ச்சிகரமாக பேசினார். நிதீஷ் குமாரை தந்தையாகத்தான் நினைக்கிறேன். இன்று தசரதனாக நிற்கிறார் நிதீஷ் குமார். தசரதன் தனது மகனை மட்டுமே காட்டுக்கு அனுப்பினார். ஆனால் நிதிஷ் குமாரோ, மொத்த பீகாரையும் காட்டுக்கு அனுப்பியுள்ளார் என்றார்.
பின்னர் நிதீஷ்குமார் பதிலுரைக்குப் பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. அந்த சமயத்தில் ஆர்ஜேடி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர். இதனால் ஆளும் கட்சி மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இறுதியாக நடந்த வாக்கெடுப்பில் 125 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்து 112 வாக்குகள் விழுந்தன. இதனால் நிதீஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
{{comments.comment}}