சிகாகோ: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோ கடற்கரைப் பகுதியில் ஹாயாக சைக்கிளிங் செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் இது. பல்வேறு தொழில் முதலீடுகள் குறித்த அறிவிப்புகளும் தினந்தோறும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தனது ஹெக்டிக்கான ஷெட்யூலுக்கு மத்தியிலும் தனது உடல் ஆரோக்கியம் தொடர்பான உடற்பயிற்சிகளிலும் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார்.

அமெரிக்கா போனதும் சான்பிரான்சிஸ்கோ நகரில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார் முதல்வர். இந்த நிலையில் தற்போது சிகாகோவில் முகாமிட்டுள்ள அவர் அங்கு கடற்கரைப் பகுதியில் சைக்கிளிங் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஜெர்க்கின் போட்டுக் கொண்டு, ஜாலியாக அவர் சைக்கிளிங் செய்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள முதல்வர், மாலை நேர அமைதி புதிய கனவுகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் என்று கேப்ஷனும் போட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவைப் பார்த்து முதல்வரைப் பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர்.
சிகாகோ பயணத்தில் முக்கிய அம்சமாக சென்னையில் ஈட்டன் நிறுவனம் ரூ. 200 கோடி மதிப்பில் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை விரிவாக்கப் போகும் அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் அஸ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் சர்வதேச மையம் இந்தியாவில், அதுவும் சென்னையில் அமையப் போகிறது என்ற செய்தியையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}