டெல்லி : வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்தியாவின் அதிவிரைவு சொகுசு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் முக்கிய வழித்தடங்களில் துவங்கப்பட்டது. இந்த ரயிலில் மிக குறைந்த நேரத்திலேயே பயணிகள் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வித சிரமமும் இல்லாமல் சொகுசாக போய் சேர்ந்து விடலாம் என்பதால் இந்த ரயிலில் செல்ல அதிகமானவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் சாதாரண கட்டணத்திலும் பயணம் செய்யும் சேவையும் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு இந்திய ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர் கரப்பான் பூச்சி இருக்கும் உணவை போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ தற்போது தீயாய் பரவி வருகிறது. இதை கண்ட நெட்டிசன்கள் அனைவரும் கொந்தளித்து, இது போன்ற மோசமான சேவை அளித்ததற்காக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதுடன் ரயில்வே நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதற்காக பயணிகள் அனைவருக்கும் ரயில்வே நிர்வாகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். இந்த போட்டோ வெளியாகி சோஷியல் மீடியாவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த பயணியிடம் ரயில்வே நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுள்ளது. உணவு சேவை வழங்கும் நபருக்கு இது குறித்து அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதை சீரியசாக எடுத்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்விட்டர் மூலமே மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது ரயில்வே.
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}