7 மாதங்களில்.. 105 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கோவை பெண்ணின் சபாஷ் சேவை!

Jan 26, 2023,12:37 PM IST
கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த 27 வயதான கே. ஸ்ரீவித்யா என்ற பெண் கடந்த ஆண்டு 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.



இந்த தாய்ப்பால் தானம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு  தாய்ப்பால் சரிவர கிடைக்காத நிலை நிலவுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரிவர சுரக்காமல் இருப்பது, பிரசவத்திற்குப் பின்னர் தாய் இறந்து விடுவது என்று பல காரணங்கள் உள்ளன.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக பல தாய்மார்கள், தாய்ப்பாலை தானமாக வழங்குகின்றனர். முன்பு மிகவும் அரிதாக இருந்த இந்த சேவை தற்போது அதிகரித்துள்ளது. பலரும் முன்வந்து தாய்ப்பாலை தானமாக அளிக்கின்றனர். 

அவர்களில் ஒருவர்தான் கோவை வடவள்ளியைச் சேர்ந்த கே.ஸ்ரீவித்யா. இவருக்கு 27 வயதாகிறது.  ஸ்ரீதிவ்யா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரையிலான 7 மாத காலகட்டத்தில் மொத்தம் 105 லிட்டர் 980 மில்லி லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளார்.

அமிர்தம் பவுண்டேஷன் மூலமாக, கோவை மருத்துவக் கல்லூரியில் உள்ள சிறப்பு சிசு பராமரிப்பு மையத்தில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு இந்த தானத்தை அவர் அளித்துள்ளார்.  இது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் சாதனையாக பதிவாகியுள்ளது.

ஸ்ரீவித்யாவுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது 10 மாதமான பெண் குழந்தையும் அவருக்கு உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்