கொழும்பு அருகே திடீர் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்..!

May 02, 2023,03:02 PM IST
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பு துறைமுகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுகம் அருகே எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு அருகே உள்ள புளூமெந்தால் சாலையில் 2 பேர் சாலை அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் திருட முயற்சித்துள்ளனர். இதை எதிர்த்து ஒரு குழு அவர்களைத் தடுக்க முயன்றது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.



இந்த நிலையில் துறைமுகத்தின் 6வது நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களில் ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட கும்பலில் இருந்த சிலர் முயன்றனர். இதையடுத்து இன்னொரு காவலர் அந்த கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இதில் 8 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேருக்கு லேசான காயம் என்று தெரிகிறது. மற்றவர்கள் நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்