கொழும்பு அருகே திடீர் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்..!

May 02, 2023,03:02 PM IST
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பு துறைமுகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுகம் அருகே எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு அருகே உள்ள புளூமெந்தால் சாலையில் 2 பேர் சாலை அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் திருட முயற்சித்துள்ளனர். இதை எதிர்த்து ஒரு குழு அவர்களைத் தடுக்க முயன்றது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.



இந்த நிலையில் துறைமுகத்தின் 6வது நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களில் ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட கும்பலில் இருந்த சிலர் முயன்றனர். இதையடுத்து இன்னொரு காவலர் அந்த கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இதில் 8 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேருக்கு லேசான காயம் என்று தெரிகிறது. மற்றவர்கள் நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

விஷால் விசிலும்.. விஷாலின் விளையாட்டுகள் 7

news

உலக சுகாதார தினம் .. ஆரோக்கியமே உண்மையான செல்வம்!

news

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு செக்? 'விஜய்', 'ஜோசப்' பெயர்களில் 4 சுயேட்சைகள் போட்டி

news

TN Assembly Elections: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026.. 7150 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் (பெரம்பூர்), நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு

news

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட்நியூஸ்...சென்னை போட்டியை மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

news

Trisha: போதுமா.. இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?.. வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி

news

கருப்பே பேரழகே!

news

என் ரதி எனக்கு கிடைக்க வரம் கேட்கிறேன்.. அவளின் (ல்) அவன்! (8)

அதிகம் பார்க்கும் செய்திகள்