சென்னை: காமெடி நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மீது நீதிபதி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் ஜெயமணி. பார்க்க நடிகர் செந்தில் போலவே இருப்பார். அவரைப் போலவே காமெடி செய்து நடித்தும் வந்தார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை 7வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி திருமால், ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் வைத்து தன்னை ஆபாசமாக பேசிய அவமரியாதை செய்யும் வகையில் ஜெயமணியும், மாரிமுத்துவும் நடந்து கொண்டதாக கூறியிருந்தார்.
இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேரில் அழைத்து விசாரித்து பின்னர் கைது செய்தனர். அதன் பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ஜெயமணி தரப்பில் கூறுகையில் வாக்கிங் போகும் பூங்காவுக்குள் நாயைக் கொண்டு வருவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இது என்று தெரிய வந்துள்ளது.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}