பீனிக்ஸ் மாலில் பிரச்சினை.. நீதிபதியிடம் வாய்ச் சண்டை.. காமெடி நடிகர் ஜெயமணி, நண்பர் கைது!

Oct 21, 2023,02:23 PM IST

சென்னை: காமெடி நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மீது நீதிபதி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.


தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் ஜெயமணி. பார்க்க நடிகர் செந்தில் போலவே இருப்பார். அவரைப் போலவே காமெடி செய்து நடித்தும் வந்தார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார்.




இந்த நிலையில் சென்னை 7வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி திருமால், ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் வைத்து தன்னை ஆபாசமாக பேசிய அவமரியாதை செய்யும் வகையில் ஜெயமணியும், மாரிமுத்துவும் நடந்து கொண்டதாக  கூறியிருந்தார்.


இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேரில் அழைத்து விசாரித்து பின்னர் கைது செய்தனர். அதன் பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ஜெயமணி தரப்பில் கூறுகையில் வாக்கிங் போகும் பூங்காவுக்குள் நாயைக் கொண்டு வருவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இது என்று தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்