சென்னை: காமெடி நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மீது நீதிபதி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் ஜெயமணி. பார்க்க நடிகர் செந்தில் போலவே இருப்பார். அவரைப் போலவே காமெடி செய்து நடித்தும் வந்தார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை 7வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி திருமால், ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் வைத்து தன்னை ஆபாசமாக பேசிய அவமரியாதை செய்யும் வகையில் ஜெயமணியும், மாரிமுத்துவும் நடந்து கொண்டதாக கூறியிருந்தார்.
இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேரில் அழைத்து விசாரித்து பின்னர் கைது செய்தனர். அதன் பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ஜெயமணி தரப்பில் கூறுகையில் வாக்கிங் போகும் பூங்காவுக்குள் நாயைக் கொண்டு வருவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இது என்று தெரிய வந்துள்ளது.
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
விடிய விடிய வச்சு செஞ்ச ஆவணி மழை.. அடிச்ச அடில.. மெட்ராஸே ஆடிப் போயிருச்சுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23, 2025... இன்று நல்லது நடக்கும்
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி ஏற்பார்கள்? : விஜய் குறித்து அண்ணாமலை கேள்வி!
கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம்... இது தான் இன்றைய சென்னையின் அடையாளம்: டாக்டர் அன்புமணி
பத்து மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜய்... அவரது தராதரம் அவ்வளவு தான்: கே.என்.நேருவின் பதில்!
Mr.Prime Minister என்று சொல்லும் அளவிற்கு விஜய் இன்னும் வளரவில்லை: நடிகர் சரத்குமார்
{{comments.comment}}