டெல்லி: ஜனநாயகத்தை காத்திட அனைவரும் தவறாது வாக்களிக்க முன்வர வேண்டும். இந்திய ஜனநாயகத்தையும், எதிர்கால தலைமுறையையும் காக்கும் தேர்தல் இது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. 18வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு புதுவை மற்றும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 39 தொகுதிகளில் இந்த வாக்கு பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிகளவில் வெயிலின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் 6 மணி முதலே வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட் பக்கத்தில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு. உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், வரும் தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை நினைவில் கொண்டு வாக்களிக்க முன்வர வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்கு என்ற தைலத்தைப் பூசி ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். வெறுப்பை தோற்கடித்து அன்பை விதைக்க அனைவரும் தவறாது வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}