இது எதிர்கால தலைமுறையைக் காக்கும் தேர்தல்.. அனைவரும் வாக்களியுங்கள் .. ராகுல் காந்தி

Apr 19, 2024,12:43 PM IST

டெல்லி: ஜனநாயகத்தை காத்திட அனைவரும் தவறாது வாக்களிக்க முன்வர வேண்டும். இந்திய ஜனநாயகத்தையும், எதிர்கால தலைமுறையையும் காக்கும் தேர்தல் இது என்று தெரிவித்துள்ளார்.


இந்தியா முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில்  மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி  நடந்து வருகிறது. 18வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு புதுவை மற்றும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 39 தொகுதிகளில் இந்த வாக்கு பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிகளவில் வெயிலின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் 6 மணி முதலே வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். 




இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட் பக்கத்தில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு. உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், வரும் தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை நினைவில் கொண்டு வாக்களிக்க முன்வர வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்கு என்ற தைலத்தைப் பூசி ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். வெறுப்பை தோற்கடித்து அன்பை விதைக்க அனைவரும் தவறாது வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்