பெங்களூரு: கன்னட சினிமா மூலம் வளர்ச்சி அடைந்துவிட்டு கன்னடர்களை அவமதிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னடப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் அவர் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அந்த மொழி ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நடித்தார். 2021ம் ஆண்டு சுல்தான் படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார். அதன்பின்னர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட்டடித்த நிலையில், சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான புஷ்பா 2 படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகவே மாறியது.

இந்நிலையில், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டு ராஷ்மிகாவை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. தனது வீடு ஐதராபாத்தில் இருப்பதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது என்பது தனக்கு தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாகவும், கன்னட சினிமா மூலம் வளர்ச்சி அடைந்துவிட்டு கன்னடர்களை அவமதிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.
இதனையடுத்து, ராஷ்மிகாவிற்கு எதிராக கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கி வருகின்றனர்.ரவி கனிகாவின் கருத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய இணை அமைச்சர் ராஜிவ் சந்திர சேகர் காங்கிரஸ் குண்டர் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார்.தங்கள் மண் சார்ந்து பேச தங்களுக்கு உரிமை உள்ளதாக ராஜிவ் சந்திர சேகருக்கு ரவி கனிகா பதிலளித்துள்ளார்.
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை
போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை
{{comments.comment}}