ராஷ்மிகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகனிகா கொந்தளிப்பு!

Mar 04, 2025,05:52 PM IST

பெங்களூரு: கன்னட  சினிமா மூலம் வளர்ச்சி அடைந்துவிட்டு கன்னடர்களை அவமதிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னடப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் அவர் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு  படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அந்த மொழி ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நடித்தார். 2021ம் ஆண்டு சுல்தான் படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார். அதன்பின்னர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட்டடித்த நிலையில், சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான புஷ்பா 2 படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகவே மாறியது.




இந்நிலையில், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டு ராஷ்மிகாவை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. தனது வீடு ஐதராபாத்தில் இருப்பதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது என்பது தனக்கு தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாகவும், கன்னட  சினிமா மூலம் வளர்ச்சி அடைந்துவிட்டு கன்னடர்களை அவமதிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.


இதனையடுத்து, ராஷ்மிகாவிற்கு எதிராக கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கி வருகின்றனர்.ரவி கனிகாவின் கருத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய இணை அமைச்சர் ராஜிவ் சந்திர சேகர் காங்கிரஸ் குண்டர் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார்.தங்கள் மண் சார்ந்து பேச தங்களுக்கு உரிமை உள்ளதாக ராஜிவ் சந்திர சேகருக்கு ரவி கனிகா பதிலளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்