ஈரோடு கிழக்கு.. தேடித் தேடிப் பார்க்கிறோம்.. எதிரிகளையே காணவில்லை.. கே.எஸ்.அழகிரி கிண்டல்!

Jan 28, 2023,10:06 AM IST
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்களும் தேடித் தேடிப் பார்க்கிறோம்.. என்ன ஒரு ஆச்சரியம்.. ஒரு எதிரியைக் கூட காணவில்லை என்று நக்கலடித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.



ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் களை கட்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சியினர் பம்பரம் போல சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மறுபக்கம் எதிர்த்துப் போட்டியிடும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜக நிலைப்பாடு தெரியவில்லை. பாமக இடைத் தேர்தலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.

இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடையே கே.எஸ். அழகிரி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இதுவரை ஒரு எதிரியைக் கூட காண முடியவில்லை. உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நாங்களும்  தேடித் தேடிப் பார்க்கிறோம். ஒரு எதிரியைக் கூட காண முடியவில்லை.  ஈரோடு முழுக்க ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லை.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன.  எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். இந்தத் தேர்தல் பலருக்கு நல்ல படிப்பினையைக் கொடுக்கும் என்று கூறினார் அழகிரி.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்