ஈரோடு கிழக்கு.. தேடித் தேடிப் பார்க்கிறோம்.. எதிரிகளையே காணவில்லை.. கே.எஸ்.அழகிரி கிண்டல்!

Jan 28, 2023,10:06 AM IST
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்களும் தேடித் தேடிப் பார்க்கிறோம்.. என்ன ஒரு ஆச்சரியம்.. ஒரு எதிரியைக் கூட காணவில்லை என்று நக்கலடித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.



ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் களை கட்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சியினர் பம்பரம் போல சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மறுபக்கம் எதிர்த்துப் போட்டியிடும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜக நிலைப்பாடு தெரியவில்லை. பாமக இடைத் தேர்தலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.

இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடையே கே.எஸ். அழகிரி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இதுவரை ஒரு எதிரியைக் கூட காண முடியவில்லை. உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நாங்களும்  தேடித் தேடிப் பார்க்கிறோம். ஒரு எதிரியைக் கூட காண முடியவில்லை.  ஈரோடு முழுக்க ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லை.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன.  எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். இந்தத் தேர்தல் பலருக்கு நல்ல படிப்பினையைக் கொடுக்கும் என்று கூறினார் அழகிரி.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்