காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்.. உறுப்பினர் கட்டணம் உயர்வு, பிரியங்கா காந்திக்கு 'செக்'

Feb 22, 2023,09:58 AM IST
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் நிர்வாக விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த மாற்றங்கள் விதிமுறைகளாக மாறவுள்ளது. 



காங்கிரஸ் கட்சி தனது நிர்வாக நடைமுறைகளில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளது.  இதுதொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பல்வேறு சுற்றுக்களாக நடந்து வந்த ஆலோசனைகளின் தொடர்ச்சியாக இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. கட்சித் தொண்டர்களுக்கும், தலைமைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சட்டிஸ்கரில் நடைபெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்கு முன்னதாக இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளன.



இதன்படி, மாநில காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுக்கான வருடாந்திர கட்டணம் ரூ. 100 என்பதிலிருந்து ரூ. 1000 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதில் வளர்ச்சிக் கட்டணம் ரூ. 400 ஆகவும், கட்சி பத்திரிகையான சந்தேஷ் இதழுக்கு ரூ. 300ம் எடுத்துக் கொள்ளப்படும்.

மூத்த காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கான வருடாந்திர கட்டணம் ரூ. 3000 ஆக இருக்கும். இந்தக் கட்டண உயர்வின் மூலமாக கட்சியினர் தீவிர சிந்தனையுடன், ஆக்கப்பூர்வமாக செயல்பட வழி பிறக்கும் என கட்சி கருதுகிறது. மேலும் கட்சிக்கான நிதி நெருக்கடியும் குறையும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

காங்கிரஸ் காரியக் கமிட்டி தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இந்தப் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். காரணம், மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு இது என்பதால்.  இதிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், லோக்சபா ராஜ்யசபா கட்சித் தலைவர்கள் ஆகியோர் காரியக் கமிட்டிக்கு தாங்களாகவே தேர்வாகி விடுவார்கள். இவர்கள் தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை. 

மற்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் காரியக் கமிட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த பட்டியலில் பிரியங்கா காந்தி வத்ராவும் சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது அவர் தேர்தலில் போட்டியிட்டுத்தான் காரியக் கமிட்டிக்கு வர முடியும் என்று விதி மாற்றப்பட்டுள்ளது.  ஆனால் இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. தேர்தலில் பிரியங்கா போட்டியிட்டால் அவருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

மேலும் ஜாதிவாதிப் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  விரைவில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்