சென்னை : அரசுடன் சிறு சிறு சங்கடங்கள் இருப்பது உண்மை தான் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் செல்வ பெருந்தகை கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக இவர் அளித்து வரும் பேட்டிகள் கூட்டணியில் ஒரு விதமான குழப்ப நிலையை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் செல்வ பெருந்தகையிடம், காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி என்பது வேறு, அரசு என்பது வேறு. அரசுடன் சிறு சிறு சங்கடங்கள் இருப்பது உண்மை தான். மேலிடத்தில் இருந்து என்ன தான் சொன்னாலும் அதை நிறைவேற்ற வேண்டியது அதிகாரிகள் தான். ஆனால் சில அதிகாரிகள், என்ன தான் மேலிடத்தில் இருந்து சொன்னாலும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள். அதனால் தான் எங்களுக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு கிடையாது என்றார்.

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு அதிக அளவில் இளைஞர்கள் கூட்டம் வந்தது பற்றி அவரிடம் கேட்டதற்கு, விஜய் மாநாட்டிற்கு வந்தது ஒன்றும் பெரிய கூட்டம் கிடையாது. இதை விட அதிகமானவர்கள், கொட்டும் மழையிலும் நாற்காலியை விட்டு எழுந்திருக்காமல் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இரு ஒரு பெரிய விஷயம் இல்லை என்றார்.
விஜய் தன்னுடைய கட்சி மாநாட்டில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என அறிவித்தார். இதனால் விஜய் மாநாடு முடிந்த மறுநாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வ பெருந்தகை, ஆட்சியில் பங்கு கேட்டு திமுக தலைமைக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. இதுவே திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதா? கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் தயாராகி விட்டதா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்று அரசுடன் சங்கடங்கள் இருப்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளதும் அனைவரையும் குழப்பமடைய செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கொளத்தூர் தொகுதி வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்...பிரச்சாரத்தில் சலசலப்பு
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
பூ வாசம் புறப்படும்.. When Time Returns as Fragrance!
எண்ணங்களை அழகாக்கும் வண்ணங்கள்.. Paint your joy in different shades of life
என் பாசத்துக்குரிய அம்மாவும், மாமியாரும்.. My dear Mom & Mom in law
நான் கற்றுக் கொண்ட சிறந்த பாடம்.. The greatest lessons I have learnt is!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்... 4 நாட்கள் மட்டுமே அவகாசம்.. 4 நாட்கள் லீவு வருகிறது!
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
{{comments.comment}}