உப்பு அல்லது சோடியம் குளோரைடு உடலுக்கு ரொம்ப முக்கியம். இது உடம்பில் தண்ணீரையும், நரம்பு மற்றும் தசைகளின் வேலையையும் சரியா வைக்குது. சாப்பாட்டுக்கு நல்ல சுவை கொடுக்குது. உணவை கெட்டுப் போகாம பாதுகாக்குது. ஆனா, அதிகமா உப்பு சாப்பிட்டா, அது கிட்னிக்கு ரொம்ப கஷ்டத்தைக் கொடுக்கும். உடம்புக்குப் பல பிரச்சினைகளை உண்டாக்கும்.
அதிகமா உப்பு சாப்பிட்டா ரத்த அழுத்தம் அதிகமாகும், உடம்பில் தண்ணிர் தங்கும், கிட்னி டேமேஜ் ஆகும் வாய்ப்பு இருக்கு, கிட்னியில் கல் உருவாகும், கிட்னியோட வேலை பாதிக்கப்படும், சிறுநீர்ல புரதம் போகும், ஏற்கனவே கிட்னி பிரச்சினை இருந்தா அது இன்னும் மோசமாகும்னு டாக்டர்கள் சொல்றாங்க. அதனால, உப்பு அளவா சாப்பிடுங்க. பதப்படுத்தின உணவுகளைத் தவிர்க்கவும். வீட்ல சமைச்ச உணவை சாப்பிடுறது நல்லது. குறிப்பாக ஊறுகாய், கருவாடு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருக்கிறவங்களுக்கு உப்பு அதிகமா சாப்பிட்டா கிட்னி சீக்கிரமா டேமேஜ் ஆகுமாம். உப்பு அதிகமா சாப்பிட்டா சிறுநீர்ல கால்சியம் அளவு அதிகமாகும். இது ஆக்சலேட் கூட சேர்ந்து கிட்னியில் கல்லை உருவாக்கும். அதனால உப்ப குறைச்சா கல் வராம தடுக்கலாம்.
கிட்னி உடம்புல சோடியம் அளவை சரியா வைக்கும். ஆனா, ரொம்ப நாளா அதிகமா உப்பு சாப்பிட்டா, கிட்னியால அதிகப்படியான சோடியத்தை வெளியேத்த முடியாது. ஏற்கனவே கிட்னி பிரச்சினை இருக்கிறவங்க அதிகமா உப்பு சாப்பிட்டா, வீக்கம், சோர்வு, மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் வரும். இதனால நோய கட்டுப்படுத்துறது கஷ்டமாகும்.
உப்பு ஒரு சின்ன பொருள் தான். ஆனா, கிட்னி வேலை செய்றதுல இதுக்கு பெரிய பங்கு இருக்கு. பதப்படுத்தின உணவுகளை குறைங்க. சாப்பாட்டுல அதிகமா உப்பு போடாதீங்க. வீட்ல சமைச்ச சாப்பாட்ட சாப்பிடுங்க. இது கிட்னியையும் உடம்பையும் பாதுகாக்கும்.
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
{{comments.comment}}