சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுடில்லி,மஷாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று தீவரமாக பரவி வருகிறது. தினம் தினம் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்றைய நிலவரப்படி கொரோனா தொற்று 5,364 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் கடந்த 5ம் தேதி 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு கர்ப்பிணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்
தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல்
"ஹலோ.. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா".. From Shared Telephones to Endless Updates!
பரமபதம் விளையாட்டு.. முன்னோர்கள் வகுத்து வந்த அபாரமான விளையாட்டு!
Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
நான் வெறும் உடன்பிறப்பு மட்டுமல்ல—.. If I stand strong today!
{{comments.comment}}