தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா தொற்று... நேற்று மட்டும் 391 பேருக்கு உறுதி!

Jun 07, 2025,02:32 PM IST

சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் புதுடில்லி,மஷாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று தீவரமாக பரவி வருகிறது. தினம் தினம் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்றைய நிலவரப்படி கொரோனா தொற்று 5,364 ஆக பதிவாகியுள்ளது.


தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் கடந்த 5ம் தேதி  498 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயரிழந்துள்ளனர்.




பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு கர்ப்பிணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

news

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்