சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுடில்லி,மஷாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று தீவரமாக பரவி வருகிறது. தினம் தினம் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்றைய நிலவரப்படி கொரோனா தொற்று 5,364 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் கடந்த 5ம் தேதி 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு கர்ப்பிணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நகர்ப்புற போக்குவரத்தில் சாதனை.. 2 விருதுகளை அள்ளியது சென்னை மெட்ரோ நிறுவனம்
லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!
தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,760 உயர்வு
டெல்லி செங்கோட்டை அருகே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலா.. புதுத் தகவல் வெளியானது!
தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!
கூட்ட நெரிசல் விவகாரம்.. அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விரைவில் கரூர் வருகை
நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. மகள் ஈஷா தியோல் கோரிக்கை
பீகார் சட்டசபைத் தேர்தல்.. 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பு
{{comments.comment}}