கொரோனா பரவல்... கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை!

Jun 06, 2025,05:09 PM IST

சென்னை: கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் நேற்று  498 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 


இதுவரைக்கும் மொத்தம் இந்தியாவில் 5,364 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி நேற்று ஒரு நாளில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து   விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க  நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஐதராபாத்தில் வேலை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக சொந்த ஊர் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.




இதனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு கர்ப்பிணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை

news

விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

news

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

news

Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்