பெண் பத்திரிக்கையாளர் குறித்த அவதூறு பேச்சு: எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை!

Feb 19, 2024,05:23 PM IST

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் - அரசியல்வாதி எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு  நீதி மன்றம் தீர்ப்பு வழங்கயுள்ளது.


அவர் மேல் முறையீடு செய்ய வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  தீர்ப்பைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எஸ்.வி.சேகர் கட்டி விட்டார்.


நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 




இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அப்போது பெண் பத்திரிக்கையாளர்  குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து 2019 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு  நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை மட்டும் செலுத்தினார்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்