சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய கூடும் என்பதால் இன்று தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டானா புயல் எதிரொலியால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் அனேக இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேபோல் கோவை, ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகள் தண்ணீர் புகுந்தது. கள்ளக்குறிச்சி, தேனி, சேலம், ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.இது தவிர நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் கன மழையால் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
டானா புயல் நாளை கரையைக் கடக்கும்
இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவானது. இந்தப் புயல் நாளை கரையைக் கடக்கவுள்ளது. இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதிகள் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் முன்னதாக 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.
டானா புயல் தற்போது பாரதீப்புக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு, இன்று காலை வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசாவின் பூரி கடற்கரை மற்றும் சாகர் தீவு பகுதி இடையே அதிதீவிர புயலாக நாளை கரையை கடக்க இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு:
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விமான நிலையம் மூடல்:
டானா புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6:00 மணி முதல் மூடப்படுகிறது. இதைத்தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கம் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
Pooranavalli Sekar Tamil Short Story: துணிச்சலான முடிவு !
Tamil Short Story: தெர்மாஸ் பிளாஸ்க்!
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
சிந்தனைச் சிதறல்.. உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
{{comments.comment}}