சென்னை : டித்வா புயல், நவம்பர் 30ம் தேதி அதிகாலை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என தென் மண்டல ஆய்வு மைய இயக்குநர் அமுதா செய்தியாளர் சந்திப்பின் போத தெரிவித்துள்ளார்.
வங்கடலில் உருவாகி இருக்கும் புதிய புயல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு வங்கக் கடலில் புயல் உருவானது. இதற்கு டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தெற்கே தென்கிழக்கில் 700 கி.மீ., தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நவம்பர் 30ம் தேதி அதிகாலை தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி இடையே தெற்கு ஆந்திரா கடலோரத்தில் புயல் கரையை கடக்கும் போது சென்னையில் கனமழை பெய்யக் கூடும். 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். நாளை நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 டெல்டா மாவட்டங்களில் கனழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். டித்வா புயல் உருவானதை அடுத்து பாம்பன் துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு புயல் மற்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}