சென்னை : டித்வா புயல், நவம்பர் 30ம் தேதி அதிகாலை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என தென் மண்டல ஆய்வு மைய இயக்குநர் அமுதா செய்தியாளர் சந்திப்பின் போத தெரிவித்துள்ளார்.
வங்கடலில் உருவாகி இருக்கும் புதிய புயல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு வங்கக் கடலில் புயல் உருவானது. இதற்கு டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தெற்கே தென்கிழக்கில் 700 கி.மீ., தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நவம்பர் 30ம் தேதி அதிகாலை தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி இடையே தெற்கு ஆந்திரா கடலோரத்தில் புயல் கரையை கடக்கும் போது சென்னையில் கனமழை பெய்யக் கூடும். 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். நாளை நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 டெல்டா மாவட்டங்களில் கனழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். டித்வா புயல் உருவானதை அடுத்து பாம்பன் துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு புயல் மற்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}