நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

Nov 27, 2025,06:25 PM IST

சென்னை : டித்வா புயல், நவம்பர் 30ம் தேதி அதிகாலை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என தென் மண்டல ஆய்வு மைய இயக்குநர் அமுதா செய்தியாளர் சந்திப்பின் போத தெரிவித்துள்ளார்.


வங்கடலில் உருவாகி இருக்கும் புதிய புயல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு வங்கக் கடலில் புயல் உருவானது. இதற்கு டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தெற்கே தென்கிழக்கில் 700 கி.மீ., தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 




நவம்பர் 30ம் தேதி அதிகாலை தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி இடையே தெற்கு ஆந்திரா கடலோரத்தில் புயல் கரையை கடக்கும் போது சென்னையில் கனமழை பெய்யக் கூடும். 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். நாளை நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 டெல்டா மாவட்டங்களில் கனழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். டித்வா புயல் உருவானதை அடுத்து பாம்பன் துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


தமிழகத்திற்கு புயல் மற்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???

news

தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!

news

முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்

news

அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

news

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!

news

போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!

news

இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!

news

சுதந்திரம் எனும் ஒளி

news

சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?

அதிகம் பார்க்கும் செய்திகள்