சென்னை: நாகை மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் மிகப் பெரிய அளவில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோடியக்கரையில் 250 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் தமிழ்நாடு கடலோரத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் தற்போது தமிழ்நாடு கடலோரத்தில் தொடர்ந்து பயணிக்கவுள்ளது. இலங்கை கடற்பரப்பிலிருந்து அது நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டனம், ராமநாதபுரம், புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 250 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. வேதாரண்யம் 185.63, வேளாங்கண்ணி 133.64, திருப்பூண்டி 123.25, நாகப்பட்டினம் 116.96, தலைஞாயிறு 108.07. பாம்பன் 101.88, காரைக்கால் 97.19 என மழை பதிவாகியுள்ளது.
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
மாட்டுப் பொங்கலும் மாடுபிடி விளையாட்டும்!
கோபம் என்ற அரக்கனை எரித்து.. பொறாமை என்ற பகைவனை.. பொசுக்குங்கள்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
சிரஞ்ஜீவி படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கா? டைரக்டர் விளக்கம்
தம்பி அண்ணாமலைக்கு.. தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.. சீமான்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கம் வெள்ளி விலை இன்றும் புதிய உச்சம்!
இயற்கை வழிபாடும் பொங்கலும்!
வாழ்வில்....!
{{comments.comment}}