சென்னை: நாகை மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் மிகப் பெரிய அளவில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோடியக்கரையில் 250 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் தமிழ்நாடு கடலோரத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் தற்போது தமிழ்நாடு கடலோரத்தில் தொடர்ந்து பயணிக்கவுள்ளது. இலங்கை கடற்பரப்பிலிருந்து அது நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டனம், ராமநாதபுரம், புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 250 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. வேதாரண்யம் 185.63, வேளாங்கண்ணி 133.64, திருப்பூண்டி 123.25, நாகப்பட்டினம் 116.96, தலைஞாயிறு 108.07. பாம்பன் 101.88, காரைக்கால் 97.19 என மழை பதிவாகியுள்ளது.
Tamil Short Story: மக்களின் மனம்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!
Tamil Short Story: அழகு கோலம்!
Tamil Poem: மன(தின்)வலி
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
{{comments.comment}}