சென்னை: நாகை மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் மிகப் பெரிய அளவில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோடியக்கரையில் 250 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் தமிழ்நாடு கடலோரத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் தற்போது தமிழ்நாடு கடலோரத்தில் தொடர்ந்து பயணிக்கவுள்ளது. இலங்கை கடற்பரப்பிலிருந்து அது நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டனம், ராமநாதபுரம், புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 250 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. வேதாரண்யம் 185.63, வேளாங்கண்ணி 133.64, திருப்பூண்டி 123.25, நாகப்பட்டினம் 116.96, தலைஞாயிறு 108.07. பாம்பன் 101.88, காரைக்கால் 97.19 என மழை பதிவாகியுள்ளது.
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}