ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கியது

Nov 30, 2024,07:19 PM IST

சென்னை : ஃபெங்கல் புயல் கரையை கடக்க துவங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முழுவதுமாக கரையை கடக்க இன்னும் 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10.கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது வேகம் குறைந்து மணிக்கு 7கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் காற்றின் வேகம் குறைந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தற்போது மாமல்லபுரத்திற்கு 50 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 90 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு 60 கி.மீ., தொலைவிலும் உள்ளது. மேற்கு வட மேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருவதால் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.




புயல் என்ற வலுவிலேயே கரையை கடக்கக் கூடிய ஃபெஞ்சல் புயலின் தலைப்பகுதி தரையை தொட்டு கரையை கடக்க துவங்கி உள்ளது. மையப்பகுதி முழுவதுமாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என்றும், அதன் வால் பகுதி கரையை கடக்க அரை மணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் கரையை கடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கல்பாக்கம், செய்யூர் பகுதிகளிலும் பலத்த காற்று வீச துவங்கி உள்ளது. 


தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு வரை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்