சென்னை : ஃபெங்கல் புயல் கரையை கடக்க துவங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முழுவதுமாக கரையை கடக்க இன்னும் 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10.கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது வேகம் குறைந்து மணிக்கு 7கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் காற்றின் வேகம் குறைந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தற்போது மாமல்லபுரத்திற்கு 50 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 90 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு 60 கி.மீ., தொலைவிலும் உள்ளது. மேற்கு வட மேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருவதால் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

புயல் என்ற வலுவிலேயே கரையை கடக்கக் கூடிய ஃபெஞ்சல் புயலின் தலைப்பகுதி தரையை தொட்டு கரையை கடக்க துவங்கி உள்ளது. மையப்பகுதி முழுவதுமாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என்றும், அதன் வால் பகுதி கரையை கடக்க அரை மணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் கரையை கடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கல்பாக்கம், செய்யூர் பகுதிகளிலும் பலத்த காற்று வீச துவங்கி உள்ளது.
தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு வரை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}