ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கியது

Nov 30, 2024,07:19 PM IST

சென்னை : ஃபெங்கல் புயல் கரையை கடக்க துவங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முழுவதுமாக கரையை கடக்க இன்னும் 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10.கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது வேகம் குறைந்து மணிக்கு 7கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் காற்றின் வேகம் குறைந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தற்போது மாமல்லபுரத்திற்கு 50 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 90 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு 60 கி.மீ., தொலைவிலும் உள்ளது. மேற்கு வட மேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருவதால் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.




புயல் என்ற வலுவிலேயே கரையை கடக்கக் கூடிய ஃபெஞ்சல் புயலின் தலைப்பகுதி தரையை தொட்டு கரையை கடக்க துவங்கி உள்ளது. மையப்பகுதி முழுவதுமாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகும் என்றும், அதன் வால் பகுதி கரையை கடக்க அரை மணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் கரையை கடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கல்பாக்கம், செய்யூர் பகுதிகளிலும் பலத்த காற்று வீச துவங்கி உள்ளது. 


தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு வரை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்