ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்

Nov 30, 2024,06:46 PM IST

சென்னை : வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயலின் திசை மாறுவதால் அது கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவான புயலுக்கு ஃபெஞ்சல் என பெயர் இடப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த இந்த புயல், பிறகு புயலாக மாறி தரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டிருந்தது. 



இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், தற்போது பலத்த காற்றும் வீசி வருகிறது. கடலில் புயல் இருக்கும் வரை சென்னையில் மிதமான மழை விட்டு விட்டு தொடரும். தற்போது புயல் மகாபலிபுரம்-கல்பாக்கம் கரையோரத்தில் உள்ளது. இது கல்பாக்கம்-செய்யூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயலில் நகரும் வேகம் குறைந்துள்ளதால் நாளை காலையே இது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கரையை கடக்கும் போது செய்யூரில் மழை கொட்டி தீர்க்கும். புதுச்சேரியிலும் கனமழை போன்ற பாதிப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.  காற்றின் வேகம் திசை மாறி வருவதால் புயல் நகரும் திசையில் மாறு ஏற்பட்டுள்ளதுடன், கரையை கடப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்