ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்

Nov 30, 2024,06:46 PM IST

சென்னை : வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயலின் திசை மாறுவதால் அது கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவான புயலுக்கு ஃபெஞ்சல் என பெயர் இடப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த இந்த புயல், பிறகு புயலாக மாறி தரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டிருந்தது. 



இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், தற்போது பலத்த காற்றும் வீசி வருகிறது. கடலில் புயல் இருக்கும் வரை சென்னையில் மிதமான மழை விட்டு விட்டு தொடரும். தற்போது புயல் மகாபலிபுரம்-கல்பாக்கம் கரையோரத்தில் உள்ளது. இது கல்பாக்கம்-செய்யூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயலில் நகரும் வேகம் குறைந்துள்ளதால் நாளை காலையே இது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கரையை கடக்கும் போது செய்யூரில் மழை கொட்டி தீர்க்கும். புதுச்சேரியிலும் கனமழை போன்ற பாதிப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.  காற்றின் வேகம் திசை மாறி வருவதால் புயல் நகரும் திசையில் மாறு ஏற்பட்டுள்ளதுடன், கரையை கடப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்