ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்

Nov 30, 2024,06:46 PM IST

சென்னை : வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயலின் திசை மாறுவதால் அது கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவான புயலுக்கு ஃபெஞ்சல் என பெயர் இடப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த இந்த புயல், பிறகு புயலாக மாறி தரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டிருந்தது. 



இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், தற்போது பலத்த காற்றும் வீசி வருகிறது. கடலில் புயல் இருக்கும் வரை சென்னையில் மிதமான மழை விட்டு விட்டு தொடரும். தற்போது புயல் மகாபலிபுரம்-கல்பாக்கம் கரையோரத்தில் உள்ளது. இது கல்பாக்கம்-செய்யூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயலில் நகரும் வேகம் குறைந்துள்ளதால் நாளை காலையே இது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கரையை கடக்கும் போது செய்யூரில் மழை கொட்டி தீர்க்கும். புதுச்சேரியிலும் கனமழை போன்ற பாதிப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.  காற்றின் வேகம் திசை மாறி வருவதால் புயல் நகரும் திசையில் மாறு ஏற்பட்டுள்ளதுடன், கரையை கடப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்