சென்னை: அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 2,229 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. து தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால் வடகடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் இன்றும் நாளையும் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி

இன்று செங்கல்பட்டு விழுப்புரம் மயிலாடுதுறை கடலூர் நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். குறிப்பாக அதிக கனமழை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,கடலூர், மாவட்டங்களில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் திருவாரூர், நாகை, மாவட்டங்களில் உள்ள ஆறு முகாம்களில் 471 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மிக கனமழை விடுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931
The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!
{{comments.comment}}