டெல்லி: ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன். இந்த சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என காங்கிரஸ் எம்.பி.,யான ராகுல் காந்தி தமிழக மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ம் தேதி இரவு கரையை கடந்த நிலையில், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் இந்த பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தந்தளித்து வருகின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தங்கள் உறவினர்களையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
மழையினால் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அது மட்டுமின்றி திருவண்ணாமலையில் பெய்த கனமழையினால் தீப மலையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், மலை அடிவாரத்தில் இருக்கும் வஉசி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாறைகள் விழுந்ததில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்பத்தியது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரமான ராகுல்காந்தி தனது இரங்கல் செய்தியை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன். இந்த சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தவர்களை நினைத்து கவலையைடகிறேன். மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}