ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்!

Dec 03, 2024,02:59 PM IST

டெல்லி: ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன்.  இந்த சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என காங்கிரஸ் எம்.பி.,யான ராகுல் காந்தி தமிழக மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.


வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ம் தேதி இரவு கரையை கடந்த நிலையில், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது.  இந்த கனமழையால் இந்த பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தந்தளித்து வருகின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தங்கள் உறவினர்களையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.




மழையினால் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அது மட்டுமின்றி திருவண்ணாமலையில் பெய்த கனமழையினால் தீப மலையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், மலை அடிவாரத்தில் இருக்கும் வஉசி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாறைகள் விழுந்ததில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்பத்தியது.


நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரமான ராகுல்காந்தி தனது இரங்கல் செய்தியை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,   ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன்.  இந்த சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தவர்களை நினைத்து கவலையைடகிறேன். மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்