Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்

Nov 29, 2024,09:09 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளை நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல வண்டலூர் உயிரியல் பூங்காவும் நாளை மூடப்பட்டிருக்கும்.


புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்படும். இன்று இரவு முதலே சென்னையில் கடற்கரைச் சாலைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. நாளை தேவையில்லாமல் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது புயலானது வேகம் எடுத்து மணிக்கு 15 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது.


8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை




அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


ஐடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்


இதேபோல  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நாளை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்துமாறும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும்போது அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைக் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக பூங்காக்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்

news

உலகத்தின் முதல் மொழி அம்மா

news

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு

news

வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்

news

அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்

news

ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம்!

news

கோவை மாணவர் கொலை வழக்கு: உதயநிதியின் குற்றச்சாட்டு அமைச்சர் கொடுத்த பதிலடி

news

Travel story: ஏழு வருடங்கள் போதாது.. அந்த 7 நாள் அனுபவத்தைச் சொல்ல.. ஒரு மினி தொடர்!

news

Monday Motivation: அலட்சியம் தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்