Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்

Nov 29, 2024,09:09 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளை நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல வண்டலூர் உயிரியல் பூங்காவும் நாளை மூடப்பட்டிருக்கும்.


புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்படும். இன்று இரவு முதலே சென்னையில் கடற்கரைச் சாலைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. நாளை தேவையில்லாமல் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது புயலானது வேகம் எடுத்து மணிக்கு 15 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது.


8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை




அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


ஐடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்


இதேபோல  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நாளை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்துமாறும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும்போது அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைக் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக பூங்காக்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்

news

Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்