Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்

Nov 29, 2024,09:09 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளை நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல வண்டலூர் உயிரியல் பூங்காவும் நாளை மூடப்பட்டிருக்கும்.


புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்படும். இன்று இரவு முதலே சென்னையில் கடற்கரைச் சாலைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. நாளை தேவையில்லாமல் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது புயலானது வேகம் எடுத்து மணிக்கு 15 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது.


8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை




அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


ஐடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்


இதேபோல  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நாளை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்துமாறும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும்போது அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைக் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக பூங்காக்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்